​இதயத்தின் குரல்

காலம் பொன் போன்றது,
ஜாக்கிரதை! சோம்பல்
அதை திருடி விடும் .

உனக்கு நேரம் இருந்தால்,
காலத்திற்காக
காத்திருக்காதே.

காலம் பொன் போன்றது,
அதை சோம்பலிடம்
அடகு வைக்காதே.

இன்றைய நிஜத்தை
நேற்றைய நினைவில்
தொலைக்காதே​,
நாளைய கனவில் கலைக்காதே

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு,
ஆனால் அது கற்பித்த
பாடத்தை மறந்துவிடாதே.

அறிவுரையை எப்போது சொல்கிறார்கள்
என்பதைவிட, யார் சொல்கிறார்கள்
என்பதே முக்கியம் .

ஆறுதல், இதை யார் சொல்கிறார்கள்
என்பதைவிட எப்போது
சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம்."
------

LAKSHYA

எழுதியவர் : Lakshya (3-Oct-20, 10:46 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 85

மேலே