என்காதலை தெரிவிப்பேன்

என்காதலை தெரிவிப்பேன்


நேரிசை வெண்பா

எங்கள் புனிதமானக் காதலை ஏற்றிடாப்
பொங்கி எழுகிறார் பெற்றோரும் -- திங்கள்
கடக்கப் பலவும் நடக்கவில்லை யொன்றும்
மடலேறத் தோன்றும் வழி


எங்கள் காதல் புனிதமானது இருந்தும் குடும்பச் சூழலால் காதல் தடைபட்டு நிற்கிறது.
நாங்கள் பழையபடி காதலை தொடர முடியவில்லை. நானும் என்னுயிர் உடலின்
வெட்கம்விட்டு பனைக்கருக்காலான குதிரை செய்து அதிலேற ஊரார் பார்த்து எங்களை
ஒன்று சேர்த்தாலும் சேர்ப்பார் என்று நினைக்கிறேன்


குறள். 6/2

.......

எழுதியவர் : பழனிராஜன் (31-Oct-20, 10:03 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 58

மேலே