பெண்ணில்லா சமுதாயம்

தாமினிகளை
தாரை வார்ப்பது
தொடர்ந்து கொண்டே....
சிலருக்கு பல மணிநேரம்
பலருக்கு சில மணித்துளி
ஊடகங்களுக்கு
மறு செய்தி வரும் வரை
இளம் பெண்
கற்பழித்துக்கொலை
நாள்தோறும் நாளேடுகளில்
அன்று கொல்லும்
அரசாங்க ஆணைக்கு
தடை சட்டம் ஆயிரம்
நின்று கொல்லும் தெய்வம்
நிதானமாய் யோசிக்கிறதோ
சட்டென்று மாறட்டும்
பெண்ணில்லா சமுதாயம்
ஆண் ஆணை ஆதிக்கம் செலுத்த
ஆண் ஆணுக்கு அடிமையாய் மாறட்டும்
அப்போது தெரியும்
பெண்ணென்றால் என்னென்று

எழுதியவர் : இவானா (14-Nov-20, 11:09 pm)
சேர்த்தது : இவானா
பார்வை : 316

மேலே