மார்கழிப் பலாவில் ஜனவரித் தேன்

புது வருஷம்...
இருபது இருபத்தொன்று...
புது வசந்தம்...
நெஞ்சத்தில் இன்று...

சந்தோசம் தரும் வரங்கள்
வருஷம் முழுமையும் வாய்த்திருக்க
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

அகத்தின் அழகில்
புறம் என்றும் மிளிரட்டும்...
புறத்தின் நேர்த்தியில்
அகம் என்றும் நிறையட்டும்...
சந்தோசப் பூக்கள்
சாமரம் வீசட்டும்...

காலத்தே செயல்கள் செய்து
உதவும் கரங்கள் ஒன்று சேர்ந்து
திறமைகளின் முழுமைகளில்
தீர்மானங்கள் ஜெயிக்கட்டும்...

திருப்பாவை திருவெம்பாவை
பாடும் மார்கழிப் பலாவில்
உலகம் ஒன்று சேர்ந்து
கொண்டாடும் ஜனவரித் தேன்...
கலந்தது... மனசு மகிழ்ந்தது...

நடப்பவை எல்லாம்
நன்று நன்று என்று அமைந்திருக்க
ஒன்று ஒன்று இருபத்தொன்றில்
வாழ்த்துகிறேன்.... இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
💐💐💐🌹🌹🌹🌺🌺🌺

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (1-Jan-21, 11:43 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 64

மேலே