அமைதிநிறை ஆழ்கடலாகும்

அமைதிநிறை ஆழ்கடலாகும்
****************************************
அலங்கார சிலைபோல
அன்னநடை பயிலுமிவள்
மண்குடங்கள் தாங்கிட்டு
நிலம்வந்த நிலவுமிவள்
வளைந்தாடும் பின்னலுடன்
அசைந்தாடும் ஆழித்தே ரன்றோ !

இசைபாடும் வளையளுடன்
இமைக்காத விழிகளையும்
இருநொடி நோக்கினால் .
நாடித்துடிப்பும் நிற்கிறது
கானம்பாடி மகிழ்கிறது
களிப்புற்ற நெஞ்சமது !

நீரெடுக்க வந்தவளை
ஏறெடுத்துக் கண்டதும்
வாயடைத்துப் போகும்
வாரியணைக்கத் தோன்றும்
அல்லல்படும் உள்ளங்களும்
அமைதிநிறை ஆழ்கடலாகும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (22-Feb-21, 9:00 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 179

மேலே