பெண்ணே

உயிர்காக்கும் ஆபத்பாந்தவராய் வருவர்
உடல் காப்பேன் உயிர்காப்பேன் என்பர்
ஊன் நான் உயிர் நீ என்பர்
அழகில் தீ நீ!
அறிவின் சுடர் நீ! என்பர்
பணிந்து கொள்! என ஆணையுமிடுவர்
தவறின்
அகந்தைத் தீ உன்னுள் என்பர்
அகங்காரத்தின் உருவம் நீ என்பர்
தவறித் தவறுரைத்தால்
அறிவுச் செருக்கு அடக்கமின்மை என்பர்.
பெண்ணே நீ நல்லவளாய் வலம் வர
நீ நீயாய் இருக்கத் தவறிவிடு!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (19-Mar-21, 9:45 am)
சேர்த்தது : Narthani 9
Tanglish : penne
பார்வை : 235

மேலே