பௌர்ணமி நிலவு 

இரவெனும் நந்தவனத்தில்
பூத்த ஒளிவீசும்
அதிசய பூவே

விண்ணெனும் வாசலில்
கதிரவன் ஏற்றி
சென்ற தீபமே

வட்டமுகம் வரைந்த
ஓவியன் மிச்சமும் வரைய
அச்சம்கொண்ட ஓவியமே

அப்பூவே கறையாய்
தீபத்தில் கரைந்து
ஓவியத்தில் கலந்து
பௌர்ணமி நிலவானதோ?!

எழுதியவர் : தினேஷ் காளிமுத்து (28-Mar-21, 9:39 pm)
பார்வை : 1177

மேலே