தங்கத் தலைவன்

வரவேற்க வாழ்த்த
காத்திருக்கும் மக்கள்
நிஜமான செயல் வடிவில்
எதிர் நோக்கும் வளங்கள்
நிறைவாகும் எனமக்கள்
கொடுத்து விட்டோம் வாக்குகளை,
கொள்கை மாறா தலைவனிடம் ,
இறுமாப்புடன் நிம்மதி கொண்டு
நிறைவுடன் மக்கள் வாழ்ந்தாக
வேண்டுமே,
நம்பிக்கை நலம் பெற நாட்டில்
நாம் தெரிந்து கொண்ட தலைவன்
தனக்கென வாழாது
மக்களுக்காக நாட்டிற்காக
வாழவேண்டுமே
நாடெல்லாம் அவரை போற்ற வேண்டும்
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
தங்கத் தலைவன் தரணியில்
தடம் பதித்திட எதிர்நோக்கும் மக்கள்

எழுதியவர் : பாத்திமாமலர் (1-May-21, 11:30 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 153

மேலே