அடிமையின் அந்தப்புரம்

சமுதாய சீரழிவை
சீர்படுத்தும் சிறைச்சாலை
சிறைபட்டு தலை கவிழ—பயிரை
வேலியே மேய்ந்ததாலா !
நேர்மை இடறும்போது
நீதி, நெறி கீழே விழும்
சிறை கூடம் மாறுவேடம் போடும்

நிரபராதிக்கும்,
நெஞ்சழுத்தக் காரனுக்கும்
சிறைச்சாலை ஒரு சுடுகாடு,
அரசியல் வாதிக்கு
அழகான ஒரு சின்ன வீடு
குற்றம் புரிந்தவனுக்கோ—அது
ஒரு அடிமையின் அந்தப்புரம்

எழுதியவர் : கோ. கணபதி. (2-May-21, 5:02 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 42

மேலே