காதல் சொல்வாயா

இந்த வேளை என்னை
கொல்லும் வேளை!
சிந்தை முழுதும் உன்னை
சிந்திக்கும் வேளை!
வளை தளத்தில் வருகிறாய்!
என்னை வளைத்து போட பார்க்கிறாய்!
எதை எதை யோ பேசுகிறாய்!
என்னை கேள்வி கேட்கிறாய்!
முற்று பெறாத வார்த்தையிலே
முழு பொழுதை கழிக்கிறாய்!
கன்னி வைத்து பேசுகிறாய்!
கண்ணால் சாய்க்க பார்க்கிறாய்!
அந்தி வந்த காலம் தெரியாமல் அன்பே என்னுடன் கதைக்கிறாய்!
அடை மழை போலவே அன்பே எனக்குள் வினாக்கள் வீசுகிறாய்!
எதோ எதோ பேசுகிறாய்!
எண்ணத்தில் உள்ளதை உரைக்க மறுக்கிறாய்!
இதழ் கொஞ்சம் திறந்து விடு!
இனிய காதல் தேனை எனக்குள் பாய்ச்சிடு!

எழுதியவர் : சுதாவி (7-May-21, 3:50 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : kaadhal solvaayaa
பார்வை : 98

மேலே