பலாப்பழமடி நீயும்

நேரிசை வெண்பா

காதலி நேசிக்கும் ஆழமாட வர்மீதாம்
காதலனின் அன்பும் சரியாக -- வேதனை
காதலால் இல்லையாம் காழிலா மாபலாவே
சோதனையி லாவிழுங் கும்


காதலி காதலனை எவ்வளவு ஆழமாக காதலிக்கிறாளோ
அதேயளவு காதலன் காதலியை காதலிக்க துன்பமென்பதேது
இந்தக் காத லென்பது கொட்டையிலா மா பலா வாகும். சோதிக்காது
உடனே எடுத்து விழுங்கலாம். (காழ் = கொட்டை)

குறள் 1/12

எழுதியவர் : பழனி ராஜன் (16-May-21, 7:51 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 78

மேலே