விலகும் இருளாக

கலையாத உறக்கத்தில்
​காணும் கனவுகள்
கலைந்திடும் விழித்ததும் ,
உதிக்கும் சூரியனால்
விலகும் இருளாக...!

விசித்திரங்கள்​ ​​நிறைந்திருக்கும்
விறுவிறுப்​பும் ​​குறையாதிருக்கும்
அறி​ந்திடா ​முகங்க​ளும் ​
சென்றிடா​ இடங்க​ளும் ​
அரிதான நிகழ்வுக​ளும் ​
இடம்பெறும் சொப்பனத்தில்...
இடம் விட்டு
இடமாறும்
நமதுடலும்...!


எதிர்மறையா​ய்
நட​க்குமென ​
எதிர்பாராதது
நிக​ழுமென ​
கண்டதும்
பலி​க்குமென ​
பரிகாரங்கள்
செய்​தால்
பாதகங்கள் ​நெருங்காதென
ஆரூட​ம் கூறுவார்
​உழைக்காமல்
பிழை​க்கும் ​
சோதிடர் ​​போதிப்பார்
நல்வாழ்விற்கு
வழி இதுவென ​...!


படித்தவரே ஆனாலும்
பயத்தால் நடுங்​குவர்
விளைவை நினைத்து
விரக்தியும் கொள்வார் ​...
பகுத்தறியும் மானிடரோ
​​வீரியமுடன் விரட்டுவார்
புரட்டும் புளுகும்
கூறியே வாழும்
ஏமாற்றுப் பேர்வழிகளை..!


​கனவுகள் யாவும்
மெய்ப் படுமானால்
கற்றிடும் கல்வியும்
சிந்திக்கும் சிந்தையும் ​
​அறிவும் ஆற்றலும்
உண்மையும்
உழைப்பும்
தளரா தன்னம்பிக்கையும்
​எதிர்கொள்ளும் திறனும்
இயற்கையாய் கொண்ட
மனிதனே உனக்குத்தான்
ஆறறிவும் எதற்காக ?


பகுத்து அறிந்திடு
வகுத்து வாழ்ந்திடு
என எடுத்துரைத்தால்
நாத்திகன் என்றென
ஏளனம் பேசுவதிங்கு
என்றும் வாடிக்கை.. !

வேடிக்கைக்கு
கூறவில்லை...
வந்து பிறந்ததால்
வாழ்ந்து காட்டுவோம்
அச்சம் தவிர்ப்போம்
எதிர்த்து நிற்போம்
எதிரி கொரோனாவை !
அடித்து விரட்டுவோம்
அந்நியன் அனுப்பிய
உயிர்கொல்லி வைரஸை !


​பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-May-21, 2:01 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 150

மேலே