பிச்சை…
பிச்சை…!
குளீரூட்டிய அறை ,
வெள்ளை ஆடை ,
கம்பீரமாய்
பச்சைமை எழுதுகோளூடன்
சாய்வு நாற்காலியில்
உட்கார்ந்திருந்த
அவனுக்கு
வெட்கம் சிறிதும் இல்லை
பிச்சைகேட்க…..!
ஆனால்,
அவன் அச்சம் தவிர்த்தான்
கூனவும்,குருகவும் இல்லை
வெட்கம் துளிகூட இல்லை ..!
அதிகார தோரணையில்
அதட்டி கேட்டான் .
உங்களிடம்
இருப்பதைக் கொடுங்கள் என்று….!
இருந்தும்
நான் அச்சப்பட்டேன்
அவனுக்குப் பிச்சைபோட…..!