செயலாற்று பணியாற்று

கருவாகி
உருவாகி
தருவாகி
எருவாகி
மறையும்
மனிதனே ,

இடைப்பட்டக்
காலந்தான்
வாழ்க்கைப்
பயணம்
மறவாதே
ஒருபோதும் !

அறிந்தும்
அதனை
ஆடுகின்ற
மானுடா
அடக்கமாய்
நடந்திடு !

அளவிலா
ஆசையுடன்
பணமும்
பதவியென
பேராசையை
கைவிடு !

சாதிசமய
வெறியென
அரிதாரம்
அணிவதை
உடனடியாய்க்
களைந்திடு !

அகம்புறமும்
வேறுபட்டு
மாறுபட்ட
நிலைதனை
மனதாலும்
தவிர்த்திடு !

பகுத்தறிவு
பாதையில்
பயணித்து
செயலாற்றி
பண்பாடு
காத்திடு !

முன்னோரை
நினைத்திடு
முதியோரை
வணங்கிடு
முன்மாதிரியாய்
வாழ்ந்திடு !

நல்லவரெனப்
பெயரெடு
வல்லவரெனக்
காட்டிடு
இரண்டிற்கும்
முயற்சியெடு !

கொள்கையில்
மாறாது
சொல்வாக்கு
தவறாது
செயலாற்று
பணியாற்று!

சுயநலமுடன்
வாழாது
பொதுநல
நோக்குடன்
வாழ்நாளைக்
கழித்திடு !


பழனி குமார்
15.06.21

எழுதியவர் : பழனி குமார் (15-Jun-21, 2:10 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 170

மேலே