உலக காற்று தினம் கவிஞர் இரா இரவி

உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !

உணவு இன்றியும் சிலநாள் வாழலாம்
உன்னத நீர் இன்றியும் சிலநாள் வாழலாம் !

ஒப்பற்ற காற்று இன்றி சில நிமிடங்கள் கூட
உயிர்கள் வாழவே முடியாது உலகில் !

காற்றுக்காக இந்தியாவே அல்லாடியது
காற்று இன்றி உயிர்கள் பல பிரிந்தது !

காற்றின் முக்கியத்துவத்தை இப்போது
கொடிய கொரோனா உணர்த்திவிட்டது !

மனிதன் மட்டுமல்ல உயிரனங்கள் வாழ
முக்கியத் தேவை காற்றே ஆகும் !

காற்று உருவமற்றது உயிர் வாழ உதவும்
காற்று உயிர் இரண்டுக்கும் உருவம் இல்லை !

காற்று நின்றால் மூச்சு நின்று விடும்
காற்றே அனைத்திற்கும் ஆதாரமாகும் !

பஞ்ச பூதங்களில் மிகவும் பயன்மிக்க
பூதம் காற்று என்றால் மிகை இல்லை !

.மரம் நடுவோம் மழை பெறுவோம்
முக்கிய காற்றுக்கும் முக்கியம் மரம் !

மரம் நடுவதை கடமையாக் கொள்வோம்
மரங்கள் வளர்த்தால் காற்று வரும் !

காற்றை கண்ணால் காண முடியாது
காற்றை அணைவும் உணர முடியும் !

உயிர் வாழ உதவிடும் உன்னதக் காற்றை
உயிரென மதித்து என்றும் போற்றிடுவோம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (15-Jun-21, 2:41 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 32

சிறந்த கவிதைகள்

மேலே