காது குத்து

தாய்வழி உயிர் வந்து
தாலாட்டுப் பாடி
மடியிலே வைத்து
தோரணம் கட்டி
தாழம்பூவே தங்க
ரதமே எனக் கொஞ்சி
உற்றாரும் உறவினரும்
கூடி மகிழ
உறுவது அறியாது
தானும் சிரிக்க
கண்ணீரு காயும்
முன்னே கறை படிய
நல்முள் பதித்து
பொற்கொல்லர் பதித்தார்
பொற்தாமரைக் காதினிலே....

-வேல் முனியசாமி

எழுதியவர் : வேல் முனியசாமி (18-Jun-21, 4:03 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : kathu kuthu
பார்வை : 2216

மேலே