அநாதையானேன்

ஆனந்தக் களிப்பு

எடுப்பு
பிழைக்க வழியைத் தேடி --. நானும்
அழைத்து வந்தேனே பெண்டுடன் பிள்ளை

முடிப்பு

ஊர்விட்டு ஊர்வந்து கூலி -- வேலை
யோர்குடைகூ லிவீடுதான் விற்றேன பார்தாலி

பாரெங்கும் வாழ்க்கையில் போலி --. மானம்
பார்க்காது வாழ்ந்திட கிடைக்கும் ஜாலி

ஆளாக்கி பிள்ளைகள் வளர்த்தேன் -- ஆனால்
நாளாக அதுபாச மிலாபாறை உணர்ந்தேன்


நாளாக நாளாக தளர்ந்தேன் -- ஆளிலா
நானும் அனாதை என்றும் உணர்ந்தேன்



..........

மாதிரிப் பாடல் (பாரதிதாசன்)
தலைவாரிப் பூசூட்டி யுன்னை --- பாட
சாலைக்கு போவென்று சொன்னாள்உன் அன்னை



எழுதியவர் : பழனி ராஜன் (6-Jul-21, 5:48 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 57

மேலே