தேயிலை தோட்ட தொழிலாளர்கள்

தேயிலை தோட்ட தொழிலாளர்கள்

கண்ணின் எதிரே
மலை முகடுகள்
அதனை சுற்றி
பனி புகைகள்
எதிரில் எதுவென்று
தெரியாமல் கண்ணை
மறைக்க

அவ்வப்பொழுது
விலகிய பனிப்புகையின்
இடையே
கண்ணுக்கு தெரிந்த
காட்சி

மலை முகட்டின்
உச்சியில் இருந்து
கீழ் மட்டத்தை
நோக்கி செல்லும்
அருவி
வெள்ளை கோடாய்
தெரிய

அருவியை ஒட்டியே
பச்சை நிறமாய்
படர்ந்து கிடக்கிறது
தேயிலை செடிகள்
இடையிடையே
அறுத்து வைத்தது
போல்

வழி பாதைகளாக
இருக்குமோ ?

அங்கங்கு நெகிழி
சாக்கு போர்த்திய
குனிந்த தலைகள்

பனியையும் குளிரையும்
கண்டு கொள்ளாமல்
அவர்கள் கைகள்
இயந்திரமாய்
தேயிலை பறித்தபடி

அனைவர் முதுகில்
தொங்கும் தேயிலை
குவியல்

இதனை பார்த்து
இரசித்தபடி

ஆவி பறக்கும்
தேயிலை பானத்தை
குடித்துக்கொண்டு

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (21-Jul-21, 12:51 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 140

மேலே