சவரம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’க்’ ‘ற்’ வல்லின எதுகை)
(‘ர்’ இடையின ஆசு)

துக்கம் விரணந் தொடைவலிசூ லங்காசந்
தற்கால சாந்தஞ் சவரத்தால் - மிக்குடற்குக்
காந்திமனப் பூரிப்பு கண்ஒளிவு காமமுண்டாஞ்
சே’ர்’ந்ததிங்கட் கொன்றிரண்டாந் தேர்

- பதார்த்த குண சிந்தாமணி

மாதத்திற்கு இரண்டு முறை செய்து கொள்ளுகிற சவரத்தினால் மனத்துயரம், புண், தொடை நோய், குத்தல், இருமல் ஆகியவைகள் சற்றுக் குறையும்; ஒளியும், மனக்கிளர்ச்சியும், விழிக்கு ஒளியும், தாக விருத்தியும் உண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Aug-21, 6:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே