மல்லித் துவையல் எள்ளுப் பொடி

நண்பன் பாதுகாத்து வைத்த
அரிக்கேன் விளக்கு... அது
என் நினைவுகளுக்கு
தொலைவுகள் தாண்டி
வெளிச்சம் பாய்ச்சுகிறது...

இனிய கிராமத்து வாழ்க்கை
விட்டு வந்து ஆண்டுகள்
இருபத்தெட்டு ஆனது... அது
காலத்தின் கட்டாயம் ஆகிப்போனது..

சுவாரசியமாய் பல விஷயங்கள்..
ஞாபகக் கண்களில்
தெளிவாய்த் தெரிகிறது...

அதிலொன்று... அரிகேன்
விளக்கு வெளிச்சத்தில்
அம்மா சுட்டுத் தந்த
சுடச்சுட சோளத் தோசைகள்
பீர்க்கங்காய் சட்னி
மல்லித்துவையல்... எள்ளுப் பொடி...

அண்ணனோடும் தங்கைகளோடும்
போட்டி போட்டு வாங்கித்
தின்றது இன்னும் ஞாபகத்தில்...
அன்று சாப்பிட்டதில்
இன்றும் நிறைகிறது மனசு...
😃👍🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (21-Sep-21, 9:54 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 103

மேலே