இறைவன்

நீரின் இனிமையில் இறைவன்
கூவும் சோலைக்குயில் இசையில் இறைவன்
வீசும் தென்றல் சுகத்தில் இறைவன்
ஓடும் நதி அழகில் இறைவன்
ஓதிடும் நல்ல அந்தணர் மறையோசையில் இறைவன்
மழலைக் குரலோசையில் இறைவன் அதன்
கள்ளமில்லா சிரிப்பில் உறைபவன் இறைவன்
உண்மை அவன் உருவில் அவன் அறிவிலும்
என்றும் ஒளிர்பவனும் அவனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Oct-21, 7:26 pm)
Tanglish : iraivan
பார்வை : 286

மேலே