போதும்

போதும்.

போதும் என்றே
கட்டளை இட்டாள்
என் அன்னை.
தன் புகழ் எழுத
வேண்டாம்,
பாட வேண்டாம்
என்றாள்,
என் அன்னை.

கேட்பேனோ நான்!
அவள் சொல்,
அவள் என் தாயன்றோ!
தாய் எப்பவும்
கோபிப்பாளோ!
தன் பிள்ளை மீது.

எழுதுவேன் எழுதுவேன்
அவள் புகழ்,
பாடுவேன் பாடுவேன்
அவள் புகழ்,
கோபிக்கட்டும்,
கோபிக்கட்டும்
என் அன்னை.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (19-Oct-21, 4:36 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : pothum
பார்வை : 87

மேலே