மரக்காதல்
வீடுமாறும் வேளை
===================
மனைவி மக்கள், தளபாடங்கள்,
பாத்திர பண்டங்கள்
மூட்டை முடிச்சிகள்,
வளர்ப்பு நாய் ,பூனை சகிதம்
வாடகை வண்டியில் ஏறிக்கொண்டு
வீடுமாறிப் போகும் வேளையில்
திரும்பிப் பார்த்துக் கையசக்க ,
அநாதரவாக முற்றத்தில்
நிற்கும் மாமரம்
காயும் பழமும் இலையும் நிழலுமென
இலவசமாக கொடுத்தும்
பார்த்துப்பார்த்து வளர்த்த நீயே என்னைத்
தனியே தவிக்கவிட்டுப் போகிறாயே ...
எப்படி மனசு வந்தது என்று கேட்பதுபோல் இருக்கிறதே!
அதோ.. தலையசைக்கும் அது
போய் வா என்றே விடை கொடுக்கிறதா
போகாதே என்று மறுப்புத்
தெரிவிக்கிறதா எப்படி அறிவேனோ..
*
மெய்யன் நடராஜ்