தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ எய்ப்பினில் வைப்பென்பது - பழமொழி நானூறு 37
நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு) (’க்’ ‘ப்’ வல்லின எதுகை)
வைத்ததனை வைப்பென் றுணரற்க தாமதனைத்
து’ய்’த்து வழங்கி இருபாலும் - அத்தகத்
தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ
எ’ய்’ப்பினில் வைப்பென் பது. 37
- பழமொழி நானூறு
பொருளுரை:
தான் தேடி வைத்த பொருளைப் பின்னர் வந்து பயன்படுத்தும் சேமிப்பு எனக் கருதற்க; தாம் அப்பொருளை நுகர்ந்தும் பிறருக்குக் கொடுத்தும் இருமைக்கும் அழகுண்டாகுமாறு செய்யத் தகுந்த இடம் நோக்கி அறங்களைச் செய்யின், தளர்ந்த காலத்து உதவும் பொருள் என்பது அதுவன்றோ?
கருத்து:
அறமே எய்ப்பினில் வைப்பாம்.
விளக்கம்:
பின்னர்ப் பெறுதல் ஒருதலை யன்மையான் வைப்பென் றுணரற்க என்றார்.
தான் உண்ணுதலும் அறமாதலின், துய்த்து என்றார்.
வைப்பு என்பது பின்னர் உதவுமாறு வைக்கப்படும் பொருள்.
'எய்ப்பினில் வைப்பு என்பது' என்பது பழமொழி.