பொன் மன செம்மல்

"ரத்தத்தின் ரத்தமாய் நின்று,
சித்தத்தில் பாசத்தை மட்டுமே
கொண்டு,

எங்கள் வீட்டுப்பிள்ளை என,
அன்புத் தொண்டன் என,
அசராத தீரன் என,

ஆயிரத்தில் ஒருவன் என,
அன்புக்கு அடிமை என,
தர்மத்தின் தலைவன் என,

காவியம் போல் வாழ்ந்தாய்!
எல்லார் மனங்களிலும்
அழியா ஓவியமாய்
நிறைந்தாய் !

அன்னமிட்ட அந்த கைகளை
எண்ணி, எண்ணி, கலங்க
செய்தாய்,

அன்பே நீ மீண்டும் பிறந்து
வா என மக்களை ஏங்க
வைத்தாய்."

"வாழ்க மக்கள் திலகத்தின் புகழ்".

எழுதியவர் : (17-Jan-22, 10:58 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 710

மேலே