காதல் தோல்வி கவிதை
❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡
பெண்ணே!
என்னை நேசிக்க
உன்னால் முடியவில்லை
உன்னை வெறுக்க
என்னால் இயலவில்லை....
நீ மணவறைக்குப் போவதற்கு
தயராகி விட்டாய்
நானும் தான் தயராகிவிட்டேன்
கல்லறைக்குப் போவதற்கு....
உன் வீட்டு வாசலில்
கட்டிய வாழையாக
என்னுயிர் சாகுதடி
அக்னி குண்டத்தில்
கொட்டிய மாகுட்சியாக
என் மனம் வேகுதடி...
உன்னோட
வாழும் பாக்கியம்தான்
கிடைக்கவில்லை
உன்னை
வாழ்த்துகின்ற பாக்கியமாவது கிடைக்குமா...?
மாக்கோலம் போட்டு விட்டு
என் கோலம் நல்லாயிருக்கா என்று கேட்பாய்
இன்று
நீ மணமகள் கோலத்தை போட்டு இருக்கிறாய்
உன்னிடம் நான் கேட்கிறேன்
இது உனக்கே நல்லாயிருக்கா...?
உனக்கு
வாழ்த்து அரிசி போட்டவர்கள்
தவறாமல்
எனக்கும் போடுவார்கள்
வாக்கரிசி....
உன் வீட்டு வாசலில்
பச்சை தென்னை ஓலை
என் வீட்டு வாசலிலும்
பச்சைத் தென்னை ஓலை
உன் வீட்டில் அது பந்தலாகும்
என் வீட்டில் அது பாடையாகும்....
மற்றொருவனுக்கு
நீ மாலை போட்டதால்
மற்றவர்களிடமிருந்து
நான் மாலையை
பெற்றுக் கொள்கிறேன்....
உனக்கு
கழுத்தில் கயிறு கட்டினார்கள்
எனக்கு கால் விரல்களில்
கயிறு கட்டுவார்கள்....
உன் வீட்டில் இன்று சிரிப்பொலி
என் வீட்டில் நாளை அழுகை ஒலி
உன்னை ஊர்வலமாக
கூட்டிச் செல்கின்றனர்
என்னை ஊர்வலமாக
தூக்கிச் செல்வார்கள்....
உன்னுடன் புதுக்குடை வருகிறது என்னுடன் பூக்கூடை வரும்....
அவ்வப்போது நீ அழுவாய்
ஆனந்தத்தில்
எப்போதும் நான் அழுவோன்
ஏக்கத்தில்....
உன் வீட்டில் மங்கல மேளம்
என் வீட்டில் சாவு மேளம்....
உன்னை அனுப்புவதற்கு
கோடி கொடுத்தனர்
என்னை அனுப்புவதற்கு
கோடி எடுத்தனர்....
உன்னை கூட்டிச்செல்ல
எவனோ வந்தான்
என்னைக் கூட்டிச்செல்ல
எமனே வருவான்....
நீ வாழ்க்கையை
தொடங்குகிறாய்
நான் வாழ்க்கையை முடிக்கிறேன்....
நீ புகுந்த வீட்டிற்கு போகிறாய்
நான் பூமிக்குள் போகிறேன்
உனக்கும் எனக்கும்
எல்லாமே
எதிர்மறையாக இருக்கிறது.....
ஆனால்
ஒன்று மட்டும்
ஒன்றாகவே இருக்கிறது
நீயும் சிரிக்கிறாய்
நானும் சிரிக்கிறேன்....!!!
*கவிதை ரசிகன்*