முஜ்ஜம்மிலுக்கு கவிதை kavithai to Muzzammil

தொல்லைகள் பல தந்த போதும்,
நண்பனாக வேண்டும்,
உற்றவனாக வேண்டும்,
சுற்றவனாக வேண்டும் என,
சற்றெற்று நீ சொன்ன போது,
சத்தமிடும் இதயமும் சற்றெற்று,
சுகமாக கேட்டு நின்றது பட்டென்று..


உனைப் போல் நண்பனைத் தேடி,

எனைப்போல் அலைந்திடும் உயிர்களும் கோடி,

உயிராய் இருக்கும் நண்பனே ,

நீயோ எனக்குள் ஒருவன்

உனை நான் பெற்றதால்

நானோ ஆயிரத்திலொருவன் !!


உணர்வை சொல்ல விளைகிறேன்,

உணர்வாய் என்று நினைக்கிறேன்,

அவசரமாய் கடந்து செல்லாதே,

அற்பமாய் இதை எண்ணாதே!


அன்பின் மிகுதி அழகினால் என்றாய்!

உன்னிடம் உள்ளது என்னவென்றும் கேட்டாய்!

அழியும் அழகில் இல்லை என் நேசம்,

அழியா பண்புகளால் வந்தது தான் என் பாசம்!!


அன்பின் வெளிப்பாடு

உடலாலுமுண்டு! உணர்வாலுமுண்டு!

தேகத்தால் வரும் அன்பு வேஷம்,

நேசத்தால் வரும் அன்பே பாசம்!!!!


பழகுவதும், பேசுவதும்,

கேட்பதும்,கெஞ்சுவதும்,

உன் உடல் மீதுல்ல அன்பினால் அல்ல,

உன் உயிர் மீதுல்ல அன்பினால் அன்றோ!


கேலிகள் செய்யுங்கள் என்மேல்,

சிரித்திடுவேன் நானும் விண்மேல்,

விளையாட்டாகவும் சொல்லிட வேண்டாம்,

என் நேசம் , உங்கள் தேகத்தின் பாசத்தினாலென்று!!!!



உணர்வால் உணர்த்த நினைக்கிறேன்,

உறுதியாய் உன்னிடம் சொல்கிறேன்,

உன் மீது எனக்குள்ளது பாசம்!

உறுதியாய் அதை உணர்ந்திடு போதும்!!


தொலைவால் தொலையாது நம் நட்பு

என அறிந்தும் ,

பிரிவதை நினைந்திடும் பொழுது

கண்களின் ஓரம்

வழிந்திடும் துளிகளால் ஈரம் !!!

பிலால்.

எழுதியவர் : பிலால் M.Sc (30-Jan-22, 9:37 am)
சேர்த்தது : Bilal
Tanglish : nanbanukku kavithai
பார்வை : 76

மேலே