நினைவு கற்களை பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்

அந்தி நேரம்..
அந்த கடலோரம்..
மணல் அரிசியை
அளைந்து...அளைந்து..
நினைவு கற்களை
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்.
ஆம்...
நினைவுகளும்...ஏக்கங்களும்...
கல்லாய்ப் போக
நனவுகளும் நாளுமிங்கே
கனவாய் போய் கொண்டிருக்க
என் ஆன்மாவில் கலந்துவிட்ட
ஆருயிர் காதலியே
உன்னால்தான் இன்னமும்
மணல் அரிசியை
அளைந்து...அளைந்து...
நினைவு கற்களை
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (2-Feb-22, 7:04 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 124

மேலே