கண்ணீர் கவிதாஞ்சலிநவீன் சேகரப்பா

கண்ணீர் கவிதாஞ்சலி ..
நவீன் சேகரப்பாவிற்கு..
########$$$$####

கசடறக் கற்றிடவே உக்ரைனுக்கு சென்றாயோ !

பிசகாகிப் போனதுவோ பிள்ளையுந்தன் கனவுகளே !

உக்கிரப். போர்நடுவே உதவியின்றி மாண்டாயோ !

எக்கிரக வக்கிரமோ இழந்தோமே நவீன்உனையே !

மாசுமறு இல்லாத மனுக்குலத்தைச் சாய்ப்பதற்கு ;

ஈசுபாசு இல்லாத ஈனர்களே போர்தொடுப்பார் !

செல்வமகன் திரும்பிடுவான் சேவைசெய்து வாழவைப்பான் ;

நம்பிக்கை பொய்த்ததையா நாடெல்லாம் கதறுதையா !

நேசநாட்டான் என்றுநம்பி பாசமாய் இருந்தோமே !

மோசஞ்செய்யத் துணிந்தானே மோசக்கார உருசியனுமே !

துப்பாக்கிக் குண்டுகளா தூரத்துப் பீரங்கியா

எப்புறமும் அழித்துவிடும் ஏவுகணைத் தாக்குதலா !

எப்படித்தான் இறந்தாயோ என்னச்சொல்ல நினைந்தாயோ !

இப்படித்தான் நடக்குமென இங்கிருப்போர் நினைக்கலையோ!

இந்தியத் திருமகனே- நவீனே ! இனி என்று உனைக் காண்போமோ !

சிந்தும் எம்கண்ணீரே போர்த்தீயை அணைக்கட்டுமே !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (2-Mar-22, 1:08 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 38

மேலே