முயற்சி
முயற்சி.
கத்தி ஒன்று
நீ எடுத்து,
வாழைதனை
வெட்டி விடு,
அது மீண்டும்
மீண்டும்,
தழைப்பதனை
பார்த்து கேள்விகள்
கேட்டு விடு.
தோல்விக்கு மேல்
தோல்விகள்,
உன் வாழ்வில்
நீ அடைந்தாலும்!
சோர்ந்து போய்
ஓர் மூலையில்
நீ முடங்கிடல் ஆகாது,
அது இறைவனுக்கும்
சம்மதம் ஆகாது.
வெற்றி நீ
அடையும் வரை,
வாழை போல் நீயும்
முயற்சி செய்ய
வேண்டாமோ?
அதுவே உன்னை
படைத்தவன்
இஷ்டமன்றோ!
ஆக்கம்
சண்டியூர் பாலன்.