சரணடைந்தது
விடியலில் - ஒரு
விடிவு பிறந்தது.
கல்லறை திறந்து - ஒரு
ஜீவன் எழுந்தது.
மரணத்தை வென்று
மாநிலத்தை காத்தது.
என்னிடத்தில் வாருங்கள்
இளைப்பாறுதல் தருவேன்
அவனுரைத்த வாக்கியம்
வாழ்க்கையை மாற்றியது.
அவன் சட்டையின்கீழ்
அடைக்கலம் புகுந்தது.
ஜெபகோஷம் எழுந்து
ஜெயகோஷம் எங்கும்
உலகெலாம் நிறைத்தது.
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆம் என் ஜீவன் நிறைந்து
அவர்தம் பொற்பாதம்
சரணடைந்தது.....!