POOVITHAZH THEN SINTHUTHE

புன்னகையில் முல்லை
____மலர்ந்து சிரித்திட
பூவிதழ் தேன்சிந்து தே !
கண்ண சைவில்
____கயல்கள் நீந்திட
காதலோ என்நெஞ் சில் !
சங்குக் கழுத்தினில்
___அந்தி நிலவுபோல்
திங்கள் முகத்தவ ளே !
விந்தை புரிந்திடும்
___தாமரை மொட்டுக்கள்
அந்திப் பொழுதின் அழகு !
குறளாய்ச் சிறுத்த
___இடையுடன் கோபுரம்
போல்குனிந்து நடக்கி றாய் !
பாதரோஜா வில்கொஞ்சும்
___வெள்ளிக் கொலுசு
மெதுவாய் நடநோ கும் !