வரமா சாபமா

ஒவ்வொரு மாதமும்
அந்த நாட்கள் வருமுன்பே
மனதில் தொற்றிக்கொள்கிறது ஒருவிதமான பயமும் பதற்றமும்
அந்த நாட்கள் கடந்தபின்பே
ஒரு பெரும் நிம்மதி
பெண்மைக்கு இது வரமா சாபமா...?

மென்மையான பெண்மையின்
அந்தத் துன்பக்கசிவு
தாய்மை என்ற தூய்மைக்காக
கடவுள் கொடுத்த வரம்
அதுவே
தாய்மை வாய்ப்பு கிட்டாமல்
தவிக்கும் ஒவ்வொரு பெண்மைக்கு
கடவுள் கொடுத்த சாபம்...

என்ன பாவம் செய்தாள்
ஏன் இந்தச் சாபம்
என்று நினைத்து நினைத்து
தீயில் விழுந்த புழுபோல
துடிக்கிறது இன்னொரு
தாய்மனசு...

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (7-May-22, 9:25 am)
பார்வை : 268

மேலே