கணவன் மனைவி..!!

செம்மறி ஆடுகளை
போல் முட்டிக்கொண்டு
வாழ்நாள் முழுதும்
கடக்க நேரிடும்..!!

ஆயிரம் தத்துவங்களும்
வந்து உரைத்தாலும்
ஆணும் பெண்ணும்
சண்டையிடாமல் இருப்பதில்லை..!!

உனக்காக அவளும்
அவளுக்காக நீயும்
ஆரம்பத்தில் ஆனந்தம்
கொள்ளும் வார்த்தைகள்தான்..!!

காலப்போக்கில் நீயாரோ
நான்யாரோ என
மனநிலை மாற்றப்படும்
புரிந்துகொள் மனமே..!!

மரத்தில் ஆயிரம்
கிளைகள் பிரிந்தாலும்
கணவனுக்கு மனைவியும்
மனைவிக்குக் கணவனும்
ஒருவருக்கொருவர் ஆணிவேறாக இருப்பினும் வாழ்க்கை சிறகடிக்கும்..!!

எழுதியவர் : (24-May-22, 9:13 am)
பார்வை : 71

மேலே