சேற்றினில் காலூன்றும் சீருழவன் காண் - கட்டளைக் கலித்துறை

கட்டளைக் கலித்துறை

மேற்கில் முகிலிடை மின்னிடும் வானவில் மின்னலுடன்
காற்றொடு வந்த கருமேகம் நல்கும் கனமழையும்
ஆற்றதன் வெள்ளத்தில் அங்குதுள் ளுங்கரு மீன்களுடன்
சேற்றினில் காலூன்றும் சீருழ வன்காண் செழிப்புடனே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-22, 8:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே