சந்தோசங்கள் எல்லாம் வலிகளாக இன்று 555

***சந்தோசங்கள் எல்லாம் வலிகளாக இன்று 555 ***
என்னுயிரே...
இரவை ரசிக்க பௌர்ணமி
நிலவு அழகுதான்...
மின்விளக்கை ரசிக்க அம்மாவாசை
இரவும் அழகுதான்...
எல்லாம் சொல்லி கொடுத்து
ரசிக்க வைத்தவள்...
என்னை தனிமையில்
விட்டுவிட்டாய்...
பதிலுக்கு நீ வாங்கி சென்றதோ
என் பூ மனதை...
பலிகொடுத்த உன்னை மறக்க
முயற்சிக்கிறேன் முடியவில்லை...
சில நேரம் உன் நினைவுகள்
வலிகளை கொடுத்தாலும்...
பிறர் அறியாமல் மறைத்து
கொள்கிறேன் பகலில்...
உன் நினைவுகள் என் இரவையும்
கடன் வாங்கி கொண்டது...
இரவெல்லாம்
என்னை உறங்கவிடாமல்...
உன்னோடு நான் பேசும்போது
கிடைத்த சந்தோசம்...
இன்று பேசாத போது சந்தோசங்கள்
எல்லாம் வலிகளாக மாறிவிட்டது...
நீ இல்லாமல் மண்ணில்
நான் இல்லை என்றாய்...
இன்று நான் இல்லாமல் நீ
புத்தம் புது பூவாகத்தானே சிரிக்கிறாய்...
உன் வாழ்க்கை பயணத்தில்
நீ காதலை மறந்து வாழலாம்...
உன் நினைவுதான் வாழ்க்கை
பயணமாக இனி தொடரும்.....
***முதல்பூ.பெ.மணி.....***