விருப்பம் இல்லாத அந்த நிறம் 555

***விருப்பம் இல்லாத அந்த நிறம் 555 ***


கைம்பெண்...


நிறங்கள் பல இருக்க
அவள் ஆசை பட்டாலும்...

சூடிக்கொள்ள முடியாத
நிறங்கள் பல...

விரு
ப்பம் இல்லை என்றாலும்
ஏற்று கொள்ள வேண்டிய நிறம்...

கணவனை இழந்தவள் மட்டும்
ஏற்று கொள்ள
வேண்டும்...

மனைவிழை இழந்த
கணவன் மட்டும்...

பல நிறங்களை
ஏற்று கொள்ளலாம்...

கணவனை இழந்தவள் எதிரே
வந்தால் சகுனம் சரியில்லை...

மனைவியை
இழந்தவன் எதிரே வ
ந்தால்...

அவனுக்கென்று
அடையாளம் உண்டோ...

விலைமாதுகள் மல்லிகை
சூடி கொள்கி
றார்கள்...

விதவைக்கு பிடித்த நிறம்
வெண்மை என்றால்...

அவள் ஏன் சூடி கொள்ள கூடாது
வெண்மை நிற பூக்களை... ?

அவளுக்கென்று வரைமுறை
சொன்ன சமுதாயம்...

ஏன் அவளுக்கென்று எதிர்பார்ப்புகளை
பூர்த்தி செய்யவில்லை...

கண்ணிமைக்கும் நேரத்தில்
நடந்த விபத்து
க்கு...

காலம் எல்லாம் ஏன்
போராடுகிறாள் இளம் விதவை...

காமத்தோடு பார்க்கும்
ண்க
ள் வர்க்கம்...

ஏன் காதல் கொண்டு மறுமணம்
முடிக்க மறுக்கிறது...

றுமணத்திற்கு பெண்
தேடும் தோழனே...

நீ ஏன் கணவனை இழந்தவளை
மறுமணம் முடிக்க கூடா
து?.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (28-May-22, 4:57 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 307

மேலே