துவரை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பஞ்சமுட்டிக் காகுமரும் பத்தியவி யஞ்சனமாம்
விஞ்சுசுரஞ் சந்நிகட்கு மெத்தநன்றாம் - பஞ்சின்
விழுந்துவரை யாதும் மெலிந்தாரைத் தேற்றுங்
கொழுந்துவரை யாயினீ கொள்
- பதார்த்த குண சிந்தாமணி
துவரை விரத முடிவிற் சேர்க்கும் பஞ்சமுட்டியாகவும், உப்பில்லா பத்தியம், சுரம், சன்னி ஆகியவற்றிற்கும் உடல் மெலிந்தோர்க்கும் உதவும்