துவரை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பஞ்சமுட்டிக் காகுமரும் பத்தியவி யஞ்சனமாம்
விஞ்சுசுரஞ் சந்நிகட்கு மெத்தநன்றாம் - பஞ்சின்
விழுந்துவரை யாதும் மெலிந்தாரைத் தேற்றுங்
கொழுந்துவரை யாயினீ கொள்

- பதார்த்த குண சிந்தாமணி

துவரை விரத முடிவிற் சேர்க்கும் பஞ்சமுட்டியாகவும், உப்பில்லா பத்தியம், சுரம், சன்னி ஆகியவற்றிற்கும் உடல் மெலிந்தோர்க்கும் உதவும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jun-22, 12:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே