சிதறிய மனம்
மனிதா நீ கோபம் கொண்டு
சிந்திய வார்த்தைகளில்
காயம் கொண்ட உள்ளங்கள்
நீ கேட்கும் மன்னிப்பு
என்ற வார்த்தையில்
மனம் மாறி விடுமென்று
தவறாக எண்ணி விடாதே...!!
பாதிக்கப்பட்ட மனதில்
காயங்களும், உறுத்தலும்
காலமெல்லாம் மனதை
வதைத்துக் கொண்டே இருக்கும்
என்பது திண்ணம்..!!
மனிதர்களே
பேசும் வார்த்தைகளை
கவனமாக
யோசித்து பேசுங்கள்...!!
சிந்திய முத்துக்களை
சில மணித்துளிகளில்
ஒன்று சேர்த்துவிட முடியும்
ஆனால்
சிதறிய மனங்களை
தலைகீழாக நின்று
முயற்சிகள் செய்தாலும்
ஒன்று சேர்ப்பது கடினமே...!!
--கோவை சுபா