புழுப்போல் உவர்ப்பூறிப் பொல்லாங்கு நாறும் அழுக்குடம்பு – அறநெறிச்சாரம் 132
நேரிசை வெண்பா
புழுப்போல் உவர்ப்பூறிப் பொல்லாங்கு நாறும்
அழுக்குடம்பு தன்னுள் வளர்ந்தாய் - விழுத்துமிழ்ந்(து)
இன்ன நடையாய் இறக்கும் வகையினை
நன்னெஞ்சே! நாடாய்காண் நற்கு 132
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
நல்ல மனமே! புழுக்கள்போல் வெறுக்கத் தக்க குணங்களும் மிகுதலால் தீமைகள் பிறப்பதற்கிடமாக இருக்கின்ற தூயதல்லாத உடம்பினில் நீ வளர்ந்தாய்;
நீ வளரும் உடம்பு படுக்கையிடை வீழ்ந்து கோழையைக் கக்கி உமிழ்ந்து இவை போன்ற பிற ஒழுக்கத்தோடும் இறக்கும் என்பதனை நன்கு ஆராய்ந்தறிந்து தெரிந்து கொண்டு அதன்மீதுள்ள பற்றினை விடுவாயாக.