செங்கடுக்காய் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சுத்தியொடு புத்தி சுகமும் புகழுமுண்டாம்
மெத்தவொளிர் பொன்னிறமாம் மேனியெல்லாம் - சுத்தமாம்
வங்கடுத்த ஈளைபல வன்காச மும்மலமுஞ்
செங்கடுக்காய்க் கில்லையெனத் தேர்
- பதார்த்த குண சிந்தாமணி
செங்கடுக்காய் சிலேட்டுமம், கோழை, இருமல், மலக்கட்டு இவற்றைப் போக்கி அறிவு, இன்பம், புகழ், உடற்கு நன்னிறம் இவற்றை அளிக்கும்.