வாலைக் குமரியே வந்தெனை அணைப்பாய் - நிலைமண்டில ஆசிரியப்பா

நிலைமண்டில ஆசிரியப்பா

பாலை வனத்துப் படகில் பைந்தமிழ்ச்
சோலைக் கதிர்போல் சுதந்திரமாய் நின்றேன்;
வாலைக் குமரியே வந்தெனை அணைப்பாய்!

பாட்டைப் பாடிப் பாங்குடன் வந்தேன்
5 கேட்க இன்பமோ கேளிரே சொல்வீர்!

சுந்தரத் தமிழில் சொக்கி யெனைமறந்தேன்;
7 இந்திர லோகத்தில் இருப்பதா யுணர்ந்தேனே!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jul-22, 6:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 59

மேலே