பிரியாகை

பிரியாகை

இந்த நாலு நாள் ம்... சிறையிலிருந்து ஜீவபறியந்தம் முடிஞ்சு வெளியாகிறது மாதிரி அப்டி ஒரு ரிலாக்சேஷன் .. இங்க இருந்து போறது .. ம்

நினைவின் பயணம் வெளியிடையில் .. என் நட்புகள் சிலருடைய எனக்கான காத்திருப்பின் பலன் நான்..

யாருமே இங்க இல்ல இன்னைக்கு ..

ஆனாலும் இன்னைவரை பேசிட்டும் அப்பப்போ பார்த்துட்டும் .. உரிமையா அன்பு செய்துகிட்டும் .. குணமறிந்தும் விட்டுக்கொடுக்காமை .. ஒருபோதும் பேசாநிலைத் தவராமை .. திட்டும்போது கூட அதற்குள் இருக்கும் நன்மை .. நஞ்சோ வன்மையோ இல்லாத பறிதவிப்பு ..
இதெல்லாம் இங்க மிஸ் பண்ணி நிறைய வருடங்கள் ஆகிறது ..

90 கள்ல, போஸ்டல் ஸ்ட்ரைக் ல ஃப்ரண்ட்ஸ் ஓட லெட்டர்ஸ் அஹ் மிஸ் பண்ணும்போதிருந்த தவிப்பு .. மழையின்போது இணைப்பூட்டாத லேண்ட்லைன் மேலான கோபம் .. எல்லாம் உடைந்திருக்கிறது ..

யார் வீட்ல லாம் இன்னும் லேண்ட்லைன் இருக்கு இன்னும் ம்

..இனி சில ஃபோன் கால்ஸ்
சில கடிதங்கள் .. புரட்டி எடுக்கணும் எல்லோரையும் சந்திக்கணும் ..

இப்படித்தான் என்ன ஏதுன்னு சொல்லாம கொள்ளாம .. மூட்டை முடிச்சக் கட்டிக்கிட்டு
கைய்யில கொஞ்சம் பணமும் ATM க்ரெடிட் கார்ட் னு‌ எடுத்துட்டு இலக்கு நிட்சயிக்காம
ரயில் ஏறிடுவேன் அப்போல்லாம் ..

அங்கங்க ஒவ்வொருத்தரா ஏறுவோம் .. அப்படிப்பட்ட உலகத்துக்கு மீண்டும் போய் ஐக்கியமாகறேன்னு நினைக்கும்போது
எண்ணற்ற எதிர்ப்பார்ப்புகள் ..
இங்க தற்காலமாக யாரிடமும் தோன்றிடாத எதிர்ப்பார்ப்பு.

வழக்கமா அவங்க எல்லோரும்தான் அழைப்பதும் ..
போனே பண்ணமாட்டேங்கிறியேடா ன்னு திட்டிட்டு பிடிவாசியா
இனி போன் பண்ணமாட்டோம்னு சொன்னவங்களை அழைத்து, அதிகக் காலம் கழித்து .. "ஆம் பேக்" .. ன்னு சொல்லும்போது ... அவங்க கெட்ட வார்த்தைச் சொல்லித் திட்டும்போது .. You know those are all irrespective of the expectations ..

இந்த காலகட்டங்கள் ல யாரோ ஒருவரையே அப்படி பார்த்திருக்க முடியும் ..

உண்மைதான்
நேச வங்கிகளின் கடன் தீர்க்காமை என்கிற சொல்லுக்கே இடமில்லாத இதயக் கிடங்குகளுடன் .. பிரியாகையைப்போல கலக்கணும் ..
நிறையப் பேரு காத்திருக்காங்க ம்

பூர்ணிமா.. உனக்குத் தெரியுமா.. அந்த ரிங் டோன் தான் இன்னும் வச்சிருக்கேன் ..

மகி இறந்துட்டு நா மொத்தமா Depression ல இருந்த சமயம்
நீ என்னோட ரிங் டோன் மாத்திவிட்டுட்ட ..
நா எதையோ மிஸ் பண்ணதுபோல இருக்கிறப்போ நீ கால் பண்ணி கேக்கவே அந்த ரிங்டோன் ன்னு சொல்லிருப்ப ..

யார் கால் பண்ணினாலும் ..
அந்த ரிங்டோன் தான் இன்னைக்கும்
ஒலிக்கும் .. ரிங்டோன் கூட நம் நினைவுகளின் ஒரு ஷேர் தானே ..

மாதவன் அந்த கார்டன் ல தனித்திருக்கிற காட்சி வரும்போது ஹாரீஸ் ஜெயராஜின் இசை,
அந்த ஃப்ளூட் ஸ்டான்ஸா மென்மாருதமாய் வருடிப் போயிருக்கும்..

மின்னலே படம் பார்க்கிறப்போ எல்லாம்.. மறுபடி மறுபடி அந்தக் காட்சியை ரீவைண்ட் செய்துப் பார்க்கிறேன் .. ஃப்ரண்ட்ஷிப்ப அடையாளப்படுத்த எத்தனை எத்தனை அழகான விஷயங்கள் இருக்கோ, முட்டாள் தனங்கள் இருக்கோ, அத்தனையும் நாம் கையாண்டிருந்தோம் .. சொல்லப்போனால் ..
அதற்குள்தான் இன்றுவரை வாழ்ந்துகொண்டும் இருக்கிறோம்தானே ம் . ..

அனுசரன்

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் (2-Aug-22, 2:54 am)
பார்வை : 61

சிறந்த கட்டுரைகள்

மேலே