கொல்லப்பட்ட நாய்

#சாலையில்_ஒரு_படுகொலை

மானுட சட்டம்
எனக்கு தெரியாது,
சட்ட திட்டம்
ஏதும் அறியாது,
சாலை விதிகள்
எனக்கு தெரியாது,
கரு பட்டம் முடிந்து
மூன்றாம் நாள்,
பசியில் கத்தும்
என் குட்டிகளின்
சத்தம் மட்டுமே
எனக்கு தெரியும்,

மாண்டுவிட்டென்
மணல் வண்டியில்,
பால் சுரக்கும்
காம்பெல்லாம்
குருதி சுரக்கிறது...

கண்கள் திறக்கா
குட்டிகளுக்கு தெரியாது
நகராட்சி வண்டியில்
என் இறுதி ஊர்வலமென,
காப்பகம் ஏது
என் குட்டிகளுக்கு....

மனிதர்களே எல்லா
உயிர்களுக்கும்
உறவுகள் உள்ளது
மறந்து விடாதீர்கள்...


#கவிதை

எழுதியவர் : சிபூ (9-Aug-22, 9:05 pm)
சேர்த்தது : சிபூ
பார்வை : 92

மேலே