பொய் பேசேல்

பொய்யுரை தவிர்..
⚘⚘⚘⚘⚘⚘⚘

உள்ளதை உள்ளதாய்
உரைத்தலே சிறப்பு

கள்ளமாய்ப் பிறந்திடும்
கயமையோ வெறுப்பு

கற்றநல் மாந்தரின்
கண்ணியப் பெருமையே

வெற்றியே கிடைக்கினும் வேண்டிடார் பொய்மையே

மன்றிலே பொய்யுரை மறுத்து

ஒன்றியே ஒழுங்கினில்
ஒழுகுதல் பீடே !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (23-Aug-22, 10:06 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 66

மேலே