பூதாச்சிறையன் என்னும் பச்சைக்கற்பூரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பூதாச் சிறையனெனும் பூரமஞ்சள் கைப்பாகுங்
கோதையர்க்காங் காசங் கொடுமேகம் - வாதாதி
என்னுந் தனித்தோஷம் ஏறு(ம்)முத்தோ ஷஞ்சொறியுங்
குன்ன விரணமும்போக் கும்
- பதார்த்த குண சிந்தாமணி
மஞ்சள் நிறமும் கசப்புச் சுவையுமுள்ள இக்கற்பூரம் காசம், மேகம், வாத, பித்த, கபதோடங்கள், நமை, புண் இவற்றை நீக்கும்; பெண்களுக்கான மருந்திற்குப் பயன்படும் .