மனித நேயம்

உலகம் பரந்து விரிந்தது
மக்கள் தொகையும்
பன்மடங்கில் பெருகியது
இது மகிழ்ச்சியான
விஷயம் தான்...
ஆனால்...
இதயம் படைத்த மனிதனால்
மகிழ்ச்சிக் கொள்ள இயலவில்லை..!!

காரணம்...
மனிதர்களின் மனதுக்குள்
"மனித நேயம்"
சுருங்கி விட்டது...!!

இயற்கையை அழித்து
வானத்தை தொட்டு விடும்
உயரத்தில்
அடுக்கு மாடி கட்டிடத்தில்
மனிதர்களின் வாழ்க்கை...
அருகில் இருப்பவர்கள்
யாரென்று
அறிமுகம் இல்லாமல்...!!

"மனித நேயம்" என்பது
புரியாமல் வாழும் மானிடம்..!!

மனிதா இந்த வரிகளை
வாசிக்கும் போது
உன் மனம் வலித்தால்
நீ மனிதன் தான்...!!

மனிதா
காலம் கடந்து விடவில்லை
கவலை கொள்ள வேண்டாம்
"மனித நேயத்துடன்"
வாழ்க்கை
காற்றை சுவாசியுங்கள்...!!

உங்களுக்கும்
இதயம் உள்ளது என்பதை
மற்றவர்கள்
அறிய வேண்டாம்
நீ மட்டும் உணர்ந்து
வாழ்ந்தால் போதும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (6-Sep-22, 5:49 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : manitha neyam
பார்வை : 558

மேலே