என்னிதயப் பொன்னி நதியானாய்

புன்னகைச் செல்வி யானாய் பூக்களின் தலைவி யானாய்
மின்னல் விழிகளா னாய்நீ அதில்கா தல்மொழி பேசினாய்
பொன்னி நதியலை யைப்பூங் கூந்தலில் பாய்ந்திட அனுமதித்தாய்
அன்பலை பாய்ந்திடும் நெஞ்சால் என்னிதயப் பொன்னி நதியானாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Sep-22, 10:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே