அன்புக் கனித்தமிழே ஆரமுதே - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அன்புக் கனித்தமிழே ஆரமுதே! தேனான
என்மகளே கன்னலின் இன்சுவையே! - மென்மைப்
புடவையில் கட்டிய போற்றிடுந் தூளி
உடன்நல்கும் தூக்கம் உனக்கு.

- வ.க.கன்னியப்பன்

வெண்பா எழுதுவோர் கவனத்திற்கு:

8-Sep-22, ல் நான் எழுத்து தளத்தில் பதிவு செய்த ’நேரிசை வெண்பா எழுதுவதில் உள்ள நுணுக்கங்கள்’ என்ற பதிவை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். சீர்களைக் கண்டபடி வகையுளி செய்யக் கூடாது.

நான்கடிகளிலும் 1, 3 சீர்களில் மோனை (பொழிப்பு மோனை) அமைதல் சிறப்பு. எதற்கு எது மோனை, எதற்கு எது எதுகை என்பதையும் சரியாகப் புரிந்து கொண்டு பதிவு செய்தால் பாடல் சிறக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Sep-22, 8:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே