பாவமும் ஏனைப் பழியும் படவருவ சாயினும் சான்றவர் செய்கலார் – நாலடியார் 295
இன்னிசை வெண்பா
பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார்; - சாதல்
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
அருநவை ஆற்றுதல் இன்று 295
- மானம், நாலடியார்
பொருளுரை:
மறுமைக்குத் தீவினையும் இம்மைக்கு மற்றைப் பழியும் உண்டாகும்படி நேர்வன தாம் இறப்பதாயினும் சான்றோர் செய்யமாட்டார்:
ஏனென்றால், இறத்தல் என்பது ஒரு நாளில் ஒரு நேரத்துத் துன்பம்; ஆனால் அப் பாவமும் பழியும் போல் என்றுந் துன்பத்துக் கேதுவான பெருங்குற்றம் பயப்பிப்பது வேறொன்றும் இல்லை.
கருத்து:
மானமுடையோர், பழிபாவஞ்கட்கு அஞ்சி ஒழுகுவர்.
விளக்கம்:
ஏனையென்றார் மற்றொன்றாகிய வென்றற்கு. சாதலின் இன்னாதது இல்லை யாகலின்1 அவ்வின்னலின் உயர்வு தோன்றச் சாயினும் என்றார்.
அருநவை - தீர்தற்கரிய குற்றம்.